பதிவு செய்த நாள்
29 செப்2012
00:42
புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, வெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரையை விடுவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சர்க்கரை ஆலைகள், வெளிச்சந்தைக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட சர்க்கரையில், குறைந்தபட்சம், 45 சதவீதத்தை, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் விற்க வேண்டும்.கடந்த சில மாதங்களாக, சர்க்கரையின் விலை உயர்ந்து வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம் முதல், சர்க்கரை விலை, கிலோவுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சர்க்கரையை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, நடப்பாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிச்சந்தை விற்பனைக்கு, 45 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கியது. பொது வினியோகத் திட்டத்திற்காக, அடுத்த இரண்டு மாதங்களில், சர்க்கரை ஆலைகள், 3.96 லட்சம் டன் சர்க்கரையை வழங்க உள்ளன.
அண்மையில், மத்திய உணவு அமைச்சகம், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை விலையை உயர்த்த திட்டமிட்டிருந்தது. ஆனால், பண்டிகை காலம் என்பதால், விலை உயர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வரும் அக்டோபரில் துவங்கும், 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு பருவத்தின் உற்பத்தியை விட, 6.4 சதவீதம் குறைந்து, 2.45 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|