சகாரா குழுமம் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடி வழங்க ஒப்புதல்சகாரா குழுமம் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடி வழங்க ஒப்புதல் ... 1ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி இல்லை 1ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி இல்லை ...
வெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2012
00:42

புதுடில்லி:பண்டிகை காலத்தை முன்னிட்டு, வெளிச்சந்தைக்கு 40 லட்சம் டன் சர்க்கரையை விடுவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சர்க்கரை ஆலைகள், வெளிச்சந்தைக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட சர்க்கரையில், குறைந்தபட்சம், 45 சதவீதத்தை, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் விற்க வேண்டும்.கடந்த சில மாதங்களாக, சர்க்கரையின் விலை உயர்ந்து வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம் முதல், சர்க்கரை விலை, கிலோவுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சர்க்கரையை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, நடப்பாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வெளிச்சந்தை விற்பனைக்கு, 45 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்கியது. பொது வினியோகத் திட்டத்திற்காக, அடுத்த இரண்டு மாதங்களில், சர்க்கரை ஆலைகள், 3.96 லட்சம் டன் சர்க்கரையை வழங்க உள்ளன.
அண்மையில், மத்திய உணவு அமைச்சகம், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சர்க்கரை விலையை உயர்த்த திட்டமிட்டிருந்தது. ஆனால், பண்டிகை காலம் என்பதால், விலை உயர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வரும் அக்டோபரில் துவங்கும், 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு பருவத்தின் உற்பத்தியை விட, 6.4 சதவீதம் குறைந்து, 2.45 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)