பதிவு செய்த நாள்
29 செப்2012
00:43
மும்பை:நாட்டின், பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக் கிழமையன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகள், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இது, ஒட்டு மொத்த அளவில், உலகின் பங்கு வர்த்தகத்தில், முன்னேற்றம் ஏற்பட வழி வகுத்தது.
பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்ததாலும், டாலர் வரத்து அதிகரித்ததை அடுத்தும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, கடந்த ஐந்து மாதங்களில், இல்லாத அளவிற்கு வலுப் பெற்றது. வர்த்தகம் முடியும் போது, ரூபாய் மதிப்பு, 52.85 ஆக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், ஊடகம் மற்றும் நுகர்பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததை அடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 183.24 புள்ளிகள் உயர்ந்து, 18,762.74 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,869.94 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,698.51 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை, உயர்ந்தும், ஐந்து நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 53.80 புள்ளிகள் அதிகரித்து, 5,703.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,735.15 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,683.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|