பதிவு செய்த நாள்
30 செப்2012
00:24
மும்பை:நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 21ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 50 கோடி டாலர் குறைந்து (2,750 கோடி ரூபாய்), 29,397 கோடி டாலராக (16.16 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, முந்தைய 14ம் தேதியுடன் நிறைவுஅடைந்த வாரத்தில், 29,447 கோடி டாலர் (16.19 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வாரங்களில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 48.56 கோடி டாலர் குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில், எவ்வித மாற்றமும் இன்றி, 2,623 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு குறைந்து உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|