பதிவு செய்த நாள்
02 அக்2012
00:22
புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையை, 4.33 சதவீதம் குறைத்துள்ளன.உள்நாட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பீ.பி.சி.எல்.,), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகிய நிறுவனங்கள், விமான நிறுவனங்களுக்கு, விமான எரிபொருளை சப்ளை செய்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, 15 நாட்களுக்கு ஒரு முறை, விமான எரிபொருள் விலையை மாற்றி அமைக்கின்றன. டில்லியில், விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்), 3,195 ரூபாய் குறைக்கப்பட்டு, 73,711 ரூபாயிலிருந்து, 70,516 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், விமான எரிபொருள் விலை, 20.38 சதவீதம் அதிகரித்துள்ளது. விமானச் சேவை நிறுவனங்களின், மொத்த செலவில், எரிபொருளின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|