பதிவு செய்த நாள்
02 அக்2012
00:24
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், சென்ற செப்., 15ம் தேதி வரையிலுமாக, நாட்டில் உள்ள முன்பேர சந்தைகளில், 80.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 82.39 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்திருந்தது என, பார்வர்டு மார்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 42 சதவீதம் வளர்ச்சியடைந்து, 12.29 லட்சம் கோடியிலிருந்து, 17.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் மீதான வர்த்தகம், 30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11.37 லட்சம் கோடியிலிருந்து, 14.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 31 சதவீதம் உயர்ந்து, 8.33 லட்சம் கோடிலிருந்து, 10.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம், 26 சதவீதம் சரிவடைந்து, 50.38 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 37.11 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நாட்டில்,தேசிய அளவில், ஐந்து முன்பேர சந்தைகளும், மண்டல அளவில், 16 சந்தைகளும் உள்ளன. எப்.எம்.சி., அமைப்பு, யூனிவர்சல் கமாடிட்டி எக்ஸ்சேஞ் என்ற புதிய நிறுவனத்திற்கு, தேசிய அளவிலான முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.இச்சந்தைகளில், தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், உலோகம், வேளாண் விளை பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீது வர்த்தகம் நடைபெறுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|