பதிவு செய்த நாள்
07 அக்2012
00:43
@Œலம்:தமிழகத்துக்கு, பாமாயில் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால், பிற வகை எண்ணெய் விலையிலும் சரிவு ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், ஒன்று சேர்ந்து கொண்டு, விலையை குறைக்காமல் உள்ளன. இதனால், பிற வகை எண்ணெய் விலை குறையாமல் உள்ளது.
மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து, இந்தியா, அதிக அளவு பாமாயிலை இறக்குமதி செய்து கொள்கிறது. இதன் காரணமாக, கடந்த வாரம், பாமாயில் விலை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் வரையிலும், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின்னுக்கு, 60 ரூபாய் முதல், 120 ரூபாய் வரையிலும் சரிவு ஏற்பட்டது. இதனால், ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கு விற்ற பாமாயில் விலை, தற்போது, 60 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல், 975 ரூபாய் முதல், 1,025 ரூபாய் விற்ற ஒரு டின் பாமாயில் விலை, 850 ரூபாய் முதல்,890 ரூபாய் வரை சரிவடைந்துஉள்ளது.இந்நிலையில், நேற்று பாமாயில் விலை, லிட்டருக்கு, மேலும் மூன்று ரூபாயும், டின்னுக்கு, 45 ரூபாய் முதல், 50 ரூபாய் வரையும் குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு லிட்டர் பாமாயில், 57 ரூபாய்க்கும், டின், 830 ரூபாய் முதல், 845 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.பாமாயில் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதன் விலை மேலும் சரிவடையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.பொதுவாக, பாமாயில் விலை சரிவடையும் போது, சூரியகாந்தி, கடலை, நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலையும் சரியும்.
கூட்டணி: ஆனால், பிரபல எண்ணெய் நிறுவனங்கள், கூட்டணி அமைத்துக் கொண்டு, சூரியகாந்தி, கடலை எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்படுவதை தடுத்து வருகின்றன.தற்போது, பாமாயில் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தமிழக எண்ணெய் ஆலைகளுக்கு சூரியகாந்தி விதை, நிலக்கடலை ஆகியவற்றின் வரத்தும் அதிகரித்துள்ளது.இதனால், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் விலைகளும் சரிவடைய வாய்ப்புள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|