இந்தியா - ஜப்பான் வர்த்தக இலக்கு ரூ.1.37 லட்சம் கோடிஇந்தியா - ஜப்பான் வர்த்தக இலக்கு ரூ.1.37 லட்சம் கோடி ... சின்ன வெங்காயம் விலை உயர்வு சின்ன வெங்காயம் விலை உயர்வு ...
துளிர் விட்டதால் பல லட்Œம் தேங்காய் @தக்கம்:விற்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:19

சேலம்:மண்டிகளில் வியாபாரிகள் இருப்பு வைத்த, பல லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சமீபத்தில் பெய்த மழையால், துளிர் விட்டதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன.
மகாராஷ்டிரா:வியாபாரிகள் சுற்றுப்பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் தேங்காய்களை, மண்டியில் நார் உரித்து மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சீசன் காலங்களில் மட்டும் ஜலகண்டபுரம் சுற்றுப்பகுதியில் இருந்து தினமும், 10 லட்சம் தேங்காய்களுக்கு மேல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையில், ஜூலை மாதம், ஆறு ரூபாய்க்கு வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்த தேங்காய், செப்டம்பர் மாதம், நான்கு ரூபாய் 50 காசாக வீழ்ச்சியடைந்தது.விலை, 25 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால் விரக்தியடைந்த வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு தேங்காய்களை அனுப்பாமல், தங்கள் மண்டியிலேயே இருப்பு வைத்தனர்.
ஜலகண்டபுரம் சுற்றுப்பகுதியில் மட்டும், 50 லட்சம் தேங்காய்கள் இருப்பு வைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேங்காய் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தேங்காய் விலை அதிகரிக்காதது வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேங்காய்களை, 90 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தால் அழுகி விடும். ஏற்கனவே இரு மாதம் இருப்பு வைத்த நிலையில், சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், பெரும்பாலான தேங்காய் துளிர்த்து விட்டது. இதனால், வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.விரக்தி;இது குறித்து, ஜலகண்டபுரம் மண்டி உரிமையாளர் குட்டியப்பன் கூறியதாவது:மண்டியில், ஒரு லட்சம் தேங்காய் இருப்பு வைத்ததில், மழையால்,
65 ஆயிரம் தேங்காய்கள் துளிர்த்து விட்டன. இந்த தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாது. மீதமுள்ள, 35 ஆயிரம் தேங்காய்களை கட்டாயம் விற்பனைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துளிர் விட்ட தேங்காய்களை வெட்டி உலர வைத்து எண்ணெ# நிறுவனத்துக்குத்தான் அனுப்ப முடியும். துளிர் விட்ட தேங்காய்களால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஜலகண்டபுரம் சுற்று வட்டார பகுதி மண்டிகளில் இருப்பு வைத்த, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் துளிர் விட்டதால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)