பதிவு செய்த நாள்
10 அக்2012
00:56
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. பல நிறுவனப் பங்கு களின் விலை குறைந்திருந்ததை சாதக மாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, சர்வதேச நிதியம் குறைத்து உள்ளது. இதையடுத்து, அந்நாடு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஜப்பான் தவிர்த்த இதர ஆசியப் பங்குச்சந்தை களில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமா கவே இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், ஆரோக்ய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்பம், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.இருப்பினும், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப்பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின்குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 84.38 புள்ளிகள் அதிகரித்து, 18,793.36 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 18,885.84 புள்ளிகள்வரையிலும், குறை ந்தபட்ச மாக 18,722.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், எல் அண்டு டி, சன்பார்மா, ஸ்டெர்லைட் இந்தியா, இந்துஸ் தான் யுனிலீவர் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலைஅதிகரித்தும்,கெயில்,பார்தி ஏர்டெல்,இண்டால் கோ உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின்குறியீட்டு எண், "நிப்டி' 28.60புள்ளிகள் உயர்ந்து, 5,704.60 புள்ளிகளில் நிலை கொண் டது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,728.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 5,677.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|