பதிவு செய்த நாள்
12 அக்2012
01:12
புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், உர மானிய நடைமுறை மாற்றத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அத்தாட்சி சீட்டு:இதன்படி, சில்லரை வர்த்தகர்கள், உரத்தை கொள்முதல் செய்ததற்கான ரசீது மற்றும் அவற்றுக்கான அத்தாட்சி ரசீதின் அடிப்படையில், உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த அத்தாட்சி ரசீது, உர மானிய கண்காணிப்பு திட்டங்கள் மூலம் சரிபார்க்கப்படும்.யூரியாவை பொறுத்தவரை, அதன் உற்பத்தி செலவிற்கும், அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கும் உள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.
பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு, மானியத்தை அரசே நிர்ணயிக்கிறது.தற்போது, உர விற்பனை குறித்து, கணக்கு தணிக்கையாளர் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையிலேயே, உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு 85 -90 சதவீதம் மானியம் வழங்குகிறது.
சான்றிதழ்:இத்துடன், மாநில அரசுகள் வழங்கும், உர விற்பனை குறித்த சான்றிதழின் பேரில், எஞ்சிய சதவீத மானியம் வழங்கப்படுகிறது.இது, புதிய முறைப்படி, சில்லரை விற்பனையாளர் களின் உர விற்பனைக்கான அத்தாட்சி ரசீதின் பேரில் மானியம் வழங்கப்படும்.உழவர்களுக்கு விற்பனை செய்யப்படும் உரம் குறித்த தகவல்களை அறியும் திட்டத்திற்கும், அமைச்சரவைக் குழு
ஒப்புதல் அளித்துள்ளது.
யூரியா விலை உயர்கிறது:மத்திய அரசு, யூரியா விலையை உயர்த்தியுள்ளது.ஒரு டன் யூரியா விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 5.360 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில்லரை விற்ப னை யில், ஒரு மூட்டை யூரியா (50 கிலோ) விலையில் 2.50 ரூபய் உயரும்.இந்த விலை உயர்வு, வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|