மொத்த நேரடி வரி வசூல் ரூ.2.72 லட்சம் கோடியாக உயர்வுமொத்த நேரடி வரி வசூல் ரூ.2.72 லட்சம் கோடியாக உயர்வு ... தொடர்ந்து ஐந்து மாதங்களாக நாட்டின் ஏற்றுமதியில் சரிவு நிலை தொடர்ந்து ஐந்து மாதங்களாக நாட்டின் ஏற்றுமதியில் சரிவு நிலை ...
உர மானியத்திற்கு புதிய நடைமுறை:அமைச்சரவை குழு ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2012
01:12

புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், உர மானிய நடைமுறை மாற்றத்திற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அத்தாட்சி சீட்டு:இதன்படி, சில்லரை வர்த்தகர்கள், உரத்தை கொள்முதல் செய்ததற்கான ரசீது மற்றும் அவற்றுக்கான அத்தாட்சி ரசீதின் அடிப்படையில், உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். இந்த அத்தாட்சி ரசீது, உர மானிய கண்காணிப்பு திட்டங்கள் மூலம் சரிபார்க்கப்படும்.யூரியாவை பொறுத்தவரை, அதன் உற்பத்தி செலவிற்கும், அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கும் உள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.
பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு, மானியத்தை அரசே நிர்ணயிக்கிறது.தற்போது, உர விற்பனை குறித்து, கணக்கு தணிக்கையாளர் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையிலேயே, உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு 85 -90 சதவீதம் மானியம் வழங்குகிறது.
சான்றிதழ்:இத்துடன், மாநில அரசுகள் வழங்கும், உர விற்பனை குறித்த சான்றிதழின் பேரில், எஞ்சிய சதவீத மானியம் வழங்கப்படுகிறது.இது, புதிய முறைப்படி, சில்லரை விற்பனையாளர் களின் உர விற்பனைக்கான அத்தாட்சி ரசீதின் பேரில் மானியம் வழங்கப்படும்.உழவர்களுக்கு விற்பனை செய்யப்படும் உரம் குறித்த தகவல்களை அறியும் திட்டத்திற்கும், அமைச்சரவைக் குழு
ஒப்புதல் அளித்துள்ளது.
யூரியா விலை உயர்கிறது:மத்திய அரசு, யூரியா விலையை உயர்த்தியுள்ளது.ஒரு டன் யூரியா விலை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 5.360 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில்லரை விற்ப னை யில், ஒரு மூட்டை யூரியா (50 கிலோ) விலையில் 2.50 ரூபய் உயரும்.இந்த விலை உயர்வு, வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)