பதிவு செய்த நாள்
17 அக்2012
00:58
ஈரோடு: நடப்பாண்டு துவக்கத்தில், மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 3,500 ரூபாயாக இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு ஜூன் மாதம், "டான்பெட்' மூலம் மஞ்சள் கொள்முதலை துவங்கியது. மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.ஆனால், அரசு மையத்தில் மஞ்சளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.அரசு விற்பனை நிலையங்களை விட, வெளிச்சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்தது. விவசாய அமைப்புகள், மஞ்சளுக்கு குறைந்த பட்சம் குவிண்டாலுக்கு, 9,000 ரூபாய் விலை அறிவிக்க வேண்டும் என, போராட்டம் நடத்தின.தவிர, விவசாயிகளே மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்ய, ஈரோட்டில் மாநில அளவிலான மாநாடு நடந்தது. தற்போது, மஞ்சள் விலை, மீண்டும் குறையத் துவங்கி விட்டது. இதனால், மண்டிகளில் மஞ்சள் வரத்தும் கணிசமாக குறைந்தது.கடந்த, 12ம் தேதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விரலி மஞ்சள் குவிண்டால், 4,693 முதல் 5,869 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 4,489 முதல், 5,296 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டன.
விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு, 370 ரூபாய் குறைந்து, 5,499 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள், 197 ரூபாய் குறைந்து, 5,099 ரூபாய்க்கு விற்பனையானது.தமிழக விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் துளசிமணி
கூறியதாவது:சென்ற ஆண்டு மஞ்சள் உற்பத்தி அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது. நடப்பாண்டு, அரசு, "டான்பெட்' கொள்முதல் மையம் துவங்கியதில் இருந்து, வெளிச்சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்து வந்தது.ஆகஸ்ட் மாதம் குவிண்டாலுக்கு, 8,000 ரூபாய் வரை விலை போனது. தற்போது, வெளிமாநில வியாபாரிகள், திட்டமிட்டு கூட்டணி அமைத்து விலை நிர்ணயம் செய்வதாலும், ஆன் - லைன் வர்த்தகம் காரணமாகவும், மஞ்சள் விலை மீண்டும் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|