பதிவு செய்த நாள்
17 அக்2012
10:28
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.07 புள்ளிகள் அதிகரித்து 18675.77 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 28.45 புள்ளிகள் அதிகரித்து 5676.45 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.ஜெர்மனியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்ற மதிப்பீட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|