பதிவு செய்த நாள்
18 அக்2012
17:15
மும்பை: காலையில் சிறிய அளவில் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு பிறகு விறுவிறு என முன்னேறியது. இதனால் ஒருவார காலத்திற்கு பின் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 181.16 புள்ளிகள் உயர்ந்து 18,791.93-எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 58.45 புள்ளிகள் உயர்ந்து 5,718.70 எனும் அளவில் முடிந்தது.
இன்று நடந்த பங்குசந்தை வியாபாரத்தில் எஸ்.பி.ஐ., டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், டி.சி.எஸ்., எல் அண்ட் டி., ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட 24 பங்குகளின் விலை ஏற்றத்தில் முடிந்தன.
இந்தியாவில் தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை விழாக்களாலும், அதுதொடர்பான வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள விற்பனை முன்னேற்றம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் சீனாவின் 3வது காலாண்டு நிதியாண்டில் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களாலும் இந்திய பங்குசந்தையில் உயர்வு காணப்பட்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|