பதிவு செய்த நாள்
25 அக்2012
00:45
திருச்சி:பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆண்டுக்கு, 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் மட்டும், வங்கி, நாடு முழுவதும் 500 கிளைகளை திறக்க உள்ளதாக இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.பன்சால் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய நிலையில், வங்கிக்கு, நாடு முழுவதும் 5,800க்கும் மேற்பட்ட கிளைகள் இயங்கி வருகின்றன. நடப்பாண்டில், கூடுதலாக 500 கிளைகள் திறக்கப்பட உள்ளன. இதில், தமிழகத்தில், 22 புதிய கிளைகளும், திருச்சி வட்டத்தில், 10 கிளைகளும் அமைக்கப்பட உள்ளன.
வரும் டிசம்பர் மாதத்திற்குள், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 500 கிளைகள், பீ.என்.பி., பிரகதி என்ற புதிய திட்டத்தின்படி மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள், வாரம் முழுவதும், 24 மணி நேரமும் (24 ழ7) வங்கி சேவையை பெறலாம்.தற்போது, வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.70 கோடியாக உள்ளது. மேலும், ஜூன் வரையிலான காலத்தில், வங்கியின் நிகர வசூலாகாத கடன் 3.34 சதவீதமாகவும், மூலதன இருப்பு விகிதம், 13 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு பன்சால் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|