பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் ... பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசு; டீசல் 18 காசுஉயர்வு!  பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசு; டீசல் 18 காசுஉயர்வு! ...
உலகில் வீணாகும் உணவில் 50 கோடி பேர் பசியாறலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
00:54

புதுடில்லி: ஆண்டுதோறும், சர்வதேச அளவில் வீணாக்கப்படும் ஒட்டு மொத்த உணவைக் கொண்டு, 50 கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.,) தெரிவித்துள்ளது.உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. குறிப்பாக, வளர்ச்சியடைந்த நாடுகளில், 68 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான உணவுப் பொருள் வீணாக்கப்படுகின்றன. வளரும் நாடுகளில் இதன் மதிப்பு, 31 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.

இதற்கு, நடுத்தர மற்றும் அதிக வருவாய் கொண்ட நாடுகள், அதிகளவில் நுகர வேண்டும் என்ற மனப்பாங்கே முக்கிய காரணம் என, எப்.ஏ.ஓ., ன் தலைமை இயக்குனர் ஜோஸ் கிராசியானோடி சில்வா தெரிவித்தார்.இதற்கு எடுத்துக்காட்டாக, 150 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கும் அதேசமயம், 87 கோடி பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என, எப்.ஏ.ஓ., மேலும் தெரிவித்துள்ளது.திருமணம் மற்றும் ஏனைய சமுதாய விழாக்களில்தான் அதிகளவு உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)