பீ.எஸ்.என்.எல்: புதிய வணிகம் மூலம்ரூ.3,000 கோடி வருவாய் ஈட்ட இலக்குபீ.எஸ்.என்.எல்: புதிய வணிகம் மூலம்ரூ.3,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு ... சமையல் எண்ணெய் இறக்குமதி 1 கோடி டன்னாக உயரும் உள்நாட்டில் உற்பத்தி குறைந்ததால் சமையல் எண்ணெய் இறக்குமதி 1 கோடி டன்னாக உயரும் உள்நாட்டில் உற்பத்தி ... ...
இயற்கை எரிவாயு உற்பத்தி 12.5 சதவீதம் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2012
00:53

புதுடில்லி: நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், 2,135 கோடி கன மீட்டராக குறைந்து உள்ளது.இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 12.5 சதவீதம் குறைவாகும் என, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், பொதுத் துறை நிறுவனங்களின், 18 ஆலைகளிலும், தனியார் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஆலைகளிலும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் மாநிலம், ஜாம் நகரிலும், எஸ்ஸார் ஆயில் நிறுவனம், வாதிநார் பகுதியிலும் சுத்திகரிப்பு ஆலைகளைக் கொண்டுள்ளன. மதிப்பீட்டு காலத்தில், அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளின், ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன், 5.4 சதவீதம் உயர்ந்து, 8.82 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி, 336 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (395 கோடி கன மீட்டர்) விட, 14.8 சதவீதம் குறைவாகும்.ஆந்திர மாநிலம், கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள, ரிலையன்ஸ்நிறுவனத்தின்,"டி.6' எண்ணெய் வயலில், இயற்கை எரிவாயு உற்பத்தி, 34.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 115 கோடி கன மீட்டராக குறைந்துள்ளது.இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில், நாட்டின் இயற்கை எரிவாயு உற்பத்தி சரிவடைந்துள்ளது.கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 1.7 சதவீதம் குறைந்து, 30.60 லட்சம்டன்னாக குறைந்துள்ளது. பொதுத் துறையை சேர்ந்த ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.,) நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 7.8 சதவீதம் குறைந்து, 12.40 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.அதேசமயம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின்,சுத்திகரிப்புத் திறன், 11.4 சதவீதம் உயர்ந்து, 1.27 கோடி டன்னிலிருந்து, 1.41 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இதில், ரியைலன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறன், 3.9 சதவீதம் உயர்ந்து, 30.40 லட்சம் டன் என்ற அளவிலும், எஸ்ஸார் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறன், இரண்டு மடங்கிற்கு மேல்அதிகரித்து, 16.80 லட்சம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)