பதிவு செய்த நாள்
28 அக்2012
00:44
மும்பை:
நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 19ம் தேதியுடன் நிறைவடைந்த
வாரத்தில், 36 கோடி டாலர் (1,980 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,523 கோடி
டாலராக (16.23 லட்சம் கோடி ரூபாய்)அதிகரித்துள்ளது.இது, முந்தைய 12ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,487
கோடி டாலர் (16.21 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ்
வங்கி தெரிவித்து உள்ளது.இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 35 கோடி டாலர் உயர்ந்து
உள்ளது.கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எவ்வித மாற்றமும் இன்றி,
2,813 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்து உள்ள
செலாவணிகளின் மதிப்பு, 221 கோடி டாலராகவும், எஸ்.டீ.ஆர். மதிப்பு, 445 கோடி
டாலராகவும் உள்ளன.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென், ஸ்டெர்லிங்
உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறு பாட்டால், கையிருப்பில்
உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக, ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|