பதிவு செய்த நாள்
02 நவ2012
03:33
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகள் வாங்கியதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. கடந்த மூன்று மாதங்களில், முதன் முறையாக, சீனாவின் தயாரிப்பு துறையின் உற்பத்தி நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் நுகர்வோர் நம்பிக்கை உயர்ந்துள்ளது என்ற நிலைப்பாட்டாலும், ஐரோப்பா பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம்
முடியும் போது, 56.32 புள்ளிகள் அதிகரித்து, 18,561.70 புள்ளிகளில் நிலை கொண்டது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 8 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 22.80 புள்ளிகள் உயர்ந்து, 5,642.50 புள்ளிகளில் நிலை பெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|