பதிவு செய்த நாள்
02 நவ2012
17:19
மும்பை : தொடர்ந்து 3வது நாளாக மும்பை பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்துள்ளது. இந்தவார பங்குசந்தையில் அதிகபட்சமாக வாரத்தின் கடைசிநாளான இன்று(02.11.12) தான் 194 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளது மும்பை பங்குசந்தை. கடந்த மூன்று மாதங்களில், முதன் முறையாக, சீனாவின் உற்பத்தி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதாலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்ற பாதைக்கான அறிகுறிகள் தென்படுவதாலும், ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தாலும் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து ஏற்றத்துடனேயே முடிந்தது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு 193.75 புள்ளிகள் உயர்ந்து 18,775.45 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 52.65 புள்ளிகள் உயர்ந்து 5,697.70 என்ற அளவிலும் முடிந்தது. இந்தவாரம் நடந்த பங்குவியாபாரத்தில் இன்று தான் அதிகபட்சமாக சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இந்திய பங்குசந்தைகளை அளவிட உதவும் 30 பங்குகளில் 26 பங்குகளின் விலை நல்ல லாபம் அடைந்தன. குறிப்பாக கெயில், பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி., மற்றும் ஐ.சி.சி.ஐ.சி.ஐ., டி.சி.எஸ்., நிறுவன பங்குகள் விலை நல்ல லாபம் அடைந்தன. மேலும் விப்ரோ நிறுவனத்தின் 2ம் காலாண்டு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டதில் அந்நிறுவனத்தின் லாபம் 24 சதவீதம் அதிகரித்து இருப்பதால் அந்த நிறுவனத்தின் பங்குகளும் நல்ல ஏற்றமும், லாபமும் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|