கேரளாவில் தடை நீடிப்பு : மூன்று கோடி முட்டைகள் தேக்கம்கேரளாவில் தடை நீடிப்பு : மூன்று கோடி முட்டைகள் தேக்கம் ... நிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சி நிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர்ந்து 3வது நாளாக காளையின் ஆதிக்கத்தில் முடிந்த பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
17:19

மும்பை : தொடர்ந்து 3வது நாளாக மும்பை பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்துள்ளது. இந்தவார பங்குசந்தையில் அதிகபட்சமாக வாரத்தின் கடைசிநாளான இன்று(02.11.12) தான் 194 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளது மும்பை பங்குசந்தை. கடந்த மூன்று மாதங்களில், முதன் முறையாக, சீனாவின் உற்பத்தி நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதாலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்ற பாதைக்கான அறிகுறிகள் தென்படுவதாலும், ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தாலும் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து ஏற்றத்துடனேயே முடிந்தது.

வர்த்தகநேர முடிவில் மும்பை ‌பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு 193.75 புள்ளிகள் உயர்ந்து 18,775.45 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 52.65 புள்ளிகள் உயர்ந்து 5,697.70 என்ற அளவிலும் முடிந்தது. இந்தவாரம் நடந்த பங்குவியாபாரத்தில் இன்று தான் அதிகபட்சமாக சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

இந்திய பங்குசந்தைகளை அளவிட உதவும் 30 பங்குகளில் 26 பங்குகளின் விலை நல்ல லாபம் ‌அடைந்தன. குறிப்பாக கெயில், பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி., மற்றும் ஐ.சி.சி.ஐ.சி.ஐ., டி.சி.எஸ்., நிறுவன பங்குகள் விலை நல்ல லாபம் அடைந்தன. மேலும் விப்ரோ நிறுவனத்தின் 2ம் காலாண்டு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டதில் அந்நிறுவனத்தின் லாபம் 24 சதவீதம் அதிகரித்து இருப்பதால் அந்த நிறுவனத்தின் பங்குகளும் நல்ல ஏற்றமும், லாபமும் பெற்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)