பருப்பு இறக்குமதி மீது வரி விதிக்க ஆலோசனைபருப்பு இறக்குமதி மீது வரி விதிக்க ஆலோசனை ... பணவீக்கம்9.75 சதவீதமாக அதிகரிப்பு பணவீக்கம்9.75 சதவீதமாக அதிகரிப்பு ...
கறிக்கோழி விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2012
02:09

உடுமலை: தமிழகத்தில், கறிக்கோழி விற்பனை தேக்கமடைந்து, விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.மூலப்பொருட்கள்தமிழகத்தில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கறிக்கோழி உற்பத்தி தொழில், பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் கறிக்கோழியில், 50 சதவீதம், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீவனம் உட்பட மூலப்பொருட்கள் விலை உயர்வால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில், கறிக்கோழி மொத்த கொள்முதல் விலை, 65 முதல் 70 ரூபாய் வரை இருந்தது.
அதிர்ச்சிகடந்த ஒரு மாதமாக, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில், விற்பனை குறைவால் தேக்கமடைந்து, கறிக்கோழி விலை கடுமையாக சரிந்தது. நேற்றைய நிலவரப்படி, மொத்த கொள்முதல் விலையை பி.சி.சி.,(பிராய்லர் கோ-ஆர்டினேசன் கமிட்டி) கிலோவுக்கு 40 ரூபாயாக நிர்ணயம் செய்தது. திடீர் விலை வீழ்ச்சியால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உற்பத்தியாளர்கள் கூறியதாவது:தற்போது, ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப்புக்கு, 70 ரூபாய் செலவாகிறது. ஆனால், மொத்த கொள்முதல் விலை 40 ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிலை நீடித்தால், கடும் இழப்பு ஏற்படும். சில மாதங்களாக தொழிலில், தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் நாங்கள், விலையை சீராக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், சங்கிலித் தொடராக, இத்தொழிலில் ஈடுபட்டு வரும் விற்பனையாளர் உட்பட அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே, தொழிலை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மொத்த கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்தாலும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் சிக்கன் கிடைப்பதில்லை. சில்லரை விற்பனை நிலையங்களில் கொள்முதல் விலைக்கு தகுந்தாற்போல் விலை குறைக்கப்படாமல், பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.மொத்த கொள்முதல் விலை நிலவரப்படி கழிவு, தோல் ஆகியவற்றை கழித்து, லாபத்தையும் கணக்கிட்டு, 90 முதல் 100 ரூபாய்க்கு விற்றாலே, சில்லரை விற்பனையாளர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பது கறிக்கோழி உற்பத்தியாளர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)