பதிவு செய்த நாள்
13 நவ2012
02:10
மும்பை: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு நவம்பர் மாதம் 9ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், 3,166 கோடி ரூபாயை நிகர அளவில், முதலீடு செய்துள்ளன. இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் 15,350 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிஉள்ளன. அதே சமயம், 12,184 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு, 3,166 கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, நடப்பு காலண்டர் ஆண்டில், நவ., 9ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, 96,861 கோடி ரூபாயாக உள்ளது.மத்திய அரசு, அண்மைக் காலமாக அறிவித்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரித்து வருகிறது.
நடப்பு மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களிலும், 436 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளன.பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ள போதிலும், மதிப்பீட்டு காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 1.15 சதவீதம் (219 புள்ளிகள்) சரிவடைந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,753 ஆக உள்ளது. துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,267 ஆக உள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி', தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|