கறிக்கோழி விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் பாதிப்புகறிக்கோழி விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு ... பணவீக்கம்9.75 சதவீதமாக அதிகரிப்பு பணவீக்கம்9.75 சதவீதமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முதலீடு ரூ.3,166 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2012
02:10

மும்பை: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு நவம்பர் மாதம் 9ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், 3,166 கோடி ரூபாயை நிகர அளவில், முதலீடு செய்துள்ளன. இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் 15,350 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிஉள்ளன. அதே சமயம், 12,184 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு, 3,166 கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, நடப்பு காலண்டர் ஆண்டில், நவ., 9ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, 96,861 கோடி ரூபாயாக உள்ளது.மத்திய அரசு, அண்மைக் காலமாக அறிவித்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரித்து வருகிறது.
நடப்பு மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களிலும், 436 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளன.பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ள போதிலும், மதிப்பீட்டு காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 1.15 சதவீதம் (219 புள்ளிகள்) சரிவடைந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,753 ஆக உள்ளது. துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,267 ஆக உள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி', தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)