பதிவு செய்த நாள்
13 நவ2012
02:13
புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,320 கோடி டாலர் (1.27 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,360 கோடி டாலர்) விட, 1.6 சதவீதம் குறைவாகும் என, வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேசமயம், இதே மாதங்களில், இறக்குமதி, (4,120 கோடி டாலர்) 7.37 சதவீதம் அதிகரித்து, 4,420 கோடி டாலர் (2.43 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை, 2,090 கோடி டாலர் (1.15 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், வர்த்தகம் பற்றாக்குறை, 1,750 கோடி டாலராக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், கச்சா
எண்ணெய் இறக்குமதி, 31.6 சதவீதம் உயர்ந்து, 1,479 கோடி டாலர் (81,345 கோடி ரூபாய்) என்ற அளவில் அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, இந்திய ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக திகழும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மந்த நிலை காணப்படுகிறது. இதனால், இந்தியாவின் அயல்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 6.18 சதவீதம் குறைந்து, 17,791 கோடி டாலரில் இருந்து, 16,690 கோடி டாலராக (9.17 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதியும், 2.66 சதவீதம் சரிவடைந்து, 28,472 கோடி டாலரிலிருந்து, 27,713 கோடி டாலராக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|