பதிவு செய்த நாள்
13 நவ2012
02:18
துபாய்: பறவைக் காய்ச்சல் காரணமாக, இந்தியாவில் இருந்து கோழி மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இரண்டாவது முறையாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.அண்மையில், பெங்களூருவில் பறவைக் காய்ச்சலால், 3,600க்கும் மேற்பட்ட வான் கோழிகள் இறந்தன. இதை, சர்வதேச பிராணிகள் ஆரோக்கிய அமைப்பு (ஓ.ஐ.இ.,) உறுதி செய்தது.இதையடுத்து, இந்தியாவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மார்ச் மாதம், ஒடிசா, திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதை ஓ.ஐ.இ., உறுதி செய்ததை அடுத்து, ஓமன் அரசு, இந்திய கோழிகளின் இறக்குமதிக்கு தடை விதித்தது. இத்தடை உத்தரவு, சென்ற செப்டம்பர் 18ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்நிலையில், தற்போது மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கோழி ஏற்றுமதி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முகூர்த்த வணிகம் : மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இன்று (செவ்வாய் கிழமை) தீபாவளியை முன்னிட்டு, மாலை 3:45 முதல் 5:00 மணி வரை (75 நிமிடங்கள்) முகூர்த்த வர்த்தகம் நடைபெறுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|