பதிவு செய்த நாள்
17 நவ2012
00:31
புதுடில்லி:
இந்திய கயிறு பொருட்களுக்கு, வெளிநாடுகளில் @தவை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின், கயிறு பொருட்கள் ஏற்றுமதி,
1,500 கோடி ரூபாயை எட்டும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. இது, முந்தைய
நிதியாண்டில், 1,050 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது என, கயிறு வாரியம்
தெரிவித்துள்ளது.இந்தியாவின் கயிறு பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்களிப்பு, 72 சதவீதம் என்ற
அளவில் உள்ளது.
செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், கயிறு பொருட்கள்
ஏற்றுமதி, 600 கோடி ரூபாயாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை
தவிர்த்து, இந்திய கயிறு பொருட்களுக்கு, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா,
ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும், நல்ல அளவில் வரவேற்பு காணப்படுகிறது.மேலும்,
நடப்பு நிதியாண்டின், இரண்டாவது ஆறு மாத காலத்தில், மேற்கண்ட நாடுகளில்
இருந்து, இந்திய கயிறு பொருட்கள் வர்த்தகர்களுக்கு, அதிக அளவில் ஆர்டர்கள்
கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், கேரளா, தமிழகம்
மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில், அதிக அளவில் தேங்காய் உற்பத்தியாகிறது.
தேங்காய் நாரிலிருந்து, உருவாக்கப்படும் கயிறுகளில் இருந்து, ரப்பர்
மிதியடி, மண் அரிமானத்தை தடுக்கும் தரை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.குடிசை தொழிலான, கயிறு
தொழிலில், உள்நாட்டில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டு
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|