பதிவு செய்த நாள்
17 நவ2012
00:32
மும்பை:
நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்
கிழமையன்று, ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. உலகளவில், பங்கு வியாபாரம்
சுணக்கமாக இருந்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம், 0.88 சதவீத
சரிவுடன் முடிவடைந்தது.அமெரிக்காவில் நிதிப் பற்றாக்குறையை குறைக்க, அதிபர்
பராக் ஒபாமா எடுக்க உள்ள நடவடிக்கைளின் எதிர்பார்ப்பால், தொடர்ந்து
மூன்றாவது நாளாக, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே
இருந்தது.
இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.நேற்றைய
வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல
துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு
ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,
வர்த்தகம் முடியும் போது, 162 புள்ளிகள் சரிவடைந்து, 18,309.37 புள்ளிகளில்
நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,
அதிகபட்சமாக, 18,563.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,266.76
புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30
நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ., டாடா மோட்டார்ஸ், சிப்லா உள்ளிட்ட 24
நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், பார்தி ஏர்டெல், இன்போசிஸ் உள்ளிட்ட
ஆறு நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின்
குறியீட்டு எண், "நிப்டி' 56.95 புள்ளிகள் குறைந்து, 5,574.05 புள்ளிகளில்
நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,650.15 புள்ளிகள்
வரையிலும், குறைந்தபட்சமாக, 5,559.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|