பதிவு செய்த நாள்
19 நவ2012
01:08
புதுடில்லி:
நாட்டின் மொலாசஸ் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், 1.06 கோடி டன்னாக
குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில்
மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 9 சதவீதம் குறைவாகும் என, சர்வதேச
சர்க்கரை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (ஐ.எஸ்.ஓ.,) தெரிவித்து உள்ளது.
சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியாவின்
பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மூலச் சர்க்கரை சுத்திகரிப்பின்
போது, வெளி வரும் மொலாசஸ் மூலம், எத்தனால் உற்பத்தி
செய்யப்படுகிறது.மேலும், கால்நடை தீவனங்கள், பல்வேறு ரசாயன பொருட்கள்
உள்ளிட்டவற்றை தயாரிக்கவும் மொலாசஸ் பயன்படுகிறது.நடப்பு, 2012ம் ஆண்டில்,
நாட்டின் மொலாசஸ் ஏற்றுமதி, 6 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என,
மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, வரும் 2013ம் ஆண்டில், 5 லட்சம் டன்னாக
குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு, 2012 - 13ம் பருவத்தில்,
நாட்டின், சர்க்கரை உற்பத்தி, 2.45 கோடி டன் என்ற அளவில் தான் இருக்கும்
என, ஐ.எஸ்.ஓ. மதிப்பிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|