பதிவு செய்த நாள்
20 நவ2012
01:48
புதுடில்லி: பொது துறையை சேர்ந்த நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (என்.எம்.டீ.சி.,) நிறுவனம், இரும்புத்தாது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், வரும் 2014-15ம் நிதியாண்டில், அதன் இரும்புத் தாது உற்பத்தித் திறனை, ஆண்டுக்கு, 4.80 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.தற்போது, என்.எம்.டீ.சி., நிறுவனத்தின் இரும்புத்தாது உற்பத்தித் திறன், ஆண்டுக்கு, 3.20 கோடி டன் என்ற அளவில் உள்ளது.என்.எம்.டீ.சி., நிறுவனத்துக்கு சொந்தமாக, சத்தீஸ்கர் மாநிலத்தின், பாலிதாலா என்ற இடத்தில், ஆண்டுக்கு, 70 லட்சம் டன் இரும்புத் தாது வளம் கொண்ட, சுரங்கம் பகுதி உள்ளது. இந்த சுரங்கம் பகுதி, அடுத்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் இரும்புத்தாது உற்பத்தி, 2.73 கோடி டன்னாக அதிகரித்திருந்தது. இது, இதற்கு முந்தைய நிதிஆண்டில், 2.52 கோடி டன் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|