பதிவு செய்த நாள்
20 நவ2012
01:50
புதுடில்லி: நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17), நாட்டின் நிலக்கரி பற்றாக்குறை, 18.50 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எஸ். நரசிங் ராவ் தெரிவித்தார்.தற்போது, நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில், கூடுதலாக, 90,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு, 30.60 கோடி டன் நிலக்கரி தேவைப்படும்.நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 79.50 கோடி டன்னை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின், நிலக்கரி உற்பத்தி, 8-9 சதவீதம் வளர்ச்சிகண்டு வரும் நிலையிலும், இதற்கான பற்றாக்குறை, 18.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேவையை விட உற்பத்தி குறைவாக இருப்பதால், மீதமுள்ள பற்றாக்குறை இறக்குமதியின் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது என, நரசிங் ராவ் @மலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|