பதிவு செய்த நாள்
29 நவ2012
00:02
குன்னூர்: கடந்த 2006ம் ஆண்டு முதல், ரப்பர் உற்பத்தியில், இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என, தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம்(உபாசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரம் வருமாறு:
உலக அளவில் 1.18 கோடி ஹெக்டேரில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் 73 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 6.2 சதவீதமும், இந்தோனேசியாவில் 29.2 சதவீதமும், சீனாவில் 9 சதவீதமும், மலேசியாவில் 8.6 சதவீதமும், வியட்நாமில் 7 சதவீதமும், பிற நாடுகளில் 16.5 சதவீத நிலப்பரப்பிலும் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் ரப்பர் பயிரிடும் நிலப்பரப்பில், இந்தியா 6ம் இடத்தில் உள்ளது.
உலகளவில், கடந்தாண்டு, 1.10 கோடி டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டது. ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|