பதிவு செய்த நாள்
29 நவ2012
00:05
மேட்டூர்:வாரவிடுமுறை என்றாலே, அசைவ பிரியர்களின் வீடுகளில் கறிக் குழம்பு கமகமக்கும். ஆனால், ஒரு சிலர் வைக்கும் கறிக்குழம்பின் மணம், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் நாக்கிலும் எச்சில் ஊற வைக்கும்.சாதாரணமாக செய்யும் கறிக்குழம்பையும், சுவையானதாக மாற்றி, கணவரிடம் சபாஷ் வாங்க வைக்கும் பெருமை, மண் சட்டி களுக்கும், கல் பாத்திரங்களுக்கும் உண்டு.காலப்போக்கில் மண் சட்டிகளையும், கல் பாத்திரங்களையும், எவர்சில்வர் பாத்திரங்கள் ஆக்கிரமித்து விட்டன.
இது, உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடியதாக கருதப்படுவதால், இல்லத்தரசிகளின் கவனம் மீண்டும் கல் பாத்திரங்களுக்கு திரும்பியுள்ளது. இதனால், கல்லில் தயார் செய்யும் பாத்திரங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி, மாவுக்கல்மேடு பகுதியில் இலகுதன்மை வாய்ந்த பாறைகள் உள்ளன.இந்த பாறைகளில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கற்களில் தோசைக்கல், பணியாரக்கல், கறி சமைக்கும் கல் பாத்திரங் கள் தயார் செய்யப்படுகின்றன. விறகு அடுப்பு, காஸ் அடுப்பு என, எந்த அடுப்பிலும் பாத்திரத்தை வைத்து சமை யல் செய்யலாம்.இந்த கல் பாத்திரங்கள், வெப்பத்தை சீராக உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால், மசாலா உள் ளிட்ட மூலப்பொருட்கள், உணவு முழுவதும் சீராகப் பரவி, சுவையை கூட்ட உதவுகிறது.
கல் பாத்திரத்தில் கறிக்குழம்பு வைத்தால் ருசியாக இருப்பதுடன், நீண்ட நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும். இதனால், சேலம் மாவட்டத்தில், தற்போது கிராமபுறங்கள் மட்டுமின்றி, நகரப்புற பெண்மணிகளும் கறிக்குழம்பு வைப்பதற்காகவே, இதுபோன்ற கல் பாத்திரங்களை விரும்பி வாங்குகின்றனர்.கறிக்குழம்பிற்கான கல் பாத்திரம், 150 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தோசைக்கல், 120 ரூபாய்க்கும், பணியாரக்கல், 120 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது என, இவ்வகை பாத்திரங்கள் தயாரிப்பவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|