பதிவு செய்த நாள்
04 டிச2012
00:16
புதுடில்லி:மூன்று கோடி முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணம், எப்போது திரும்ப வழங்கப்படும் என்பதை உறுதியாக கூறுமாறு, சகாரா குழும நிறுவனங்
களுக்கு, சுப்ரீம் கோர்ட் ஒரு நாள், "கெடு' விதித்துள்ளது.விதிமுறைகளை மீறி முதலீடுகளை திரட்டிய வழக்கில், சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு மூன்று மாதங்களில் பணத்தை திரும்ப அளித்து விடுவதாக, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தன.ஆனால், அதன்படி வழங்காமல் இந்நிறுவனங்கள், பங்குகள் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தன. இது, நவ., 30ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, சகாரா நிறுவனம் ஒன்றின் சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட்டில், 5,100 கோடி ரூபாய்க்கான வரைவோலையை உடனடியாக தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தாத சகாரா நிறுவனங்களின் போக்கை கடுமையாக கண்டித்த தலைமை நீதிபதி, "உங்கள் ஒவ்வொரு நோக்கமும், செயல்பாடும் தடுமாற்றமாகவே உள்ளது. உங்கள் தேவைக்கேற்ப, சுப்ரீம் கோர்ட்டி உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது' என்று கூறினார்.முதலீட்டாளர்களுக்கு ஒரு வாரத்தில் பணத்தை திரும்ப கொடுக்க முடியுமா, முடியாதா என்பதை நாளைக்குள் (இன்று) தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஒரு கட்டத்தில், சகாரா நிறுவனமொன்றின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி, எழுந்து நின்று ஆவேசமாக பேசினார்.அப்போது, "இது முறையல்ல. உங்கள் வழக்கு தோல்வி அடையும் நிலையிலும், நீங்கள் இப்படி குதிக்கக் கூடாது. உட்காருங்கள்' என்று தலைமை நீதிபதி கண்டித்தார்.
பொறுமைக்கு உதாரணமான சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நேற்று கடுமையாக நடந்து கொண்டதால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|