பதிவு செய்த நாள்
10 டிச2012
00:26
புதுடில்லி;நடப்பு நிதியாண்டில், நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்த எட்டு மாத காலத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 23.66 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (29.81 லட்சம் டன்) விட, 21 சதவீதம் குறைவாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கணக்கீட்டு காலத்தில், இந்தியாவிலிருந்து, தென் கொரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு அதிக அளவில் புண்ணாக்கு ஏற்றுமதியாகி உள்ளது. அதேசமயம், ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்துள்ளது.
ஈரான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 1.75 லட்சம் டன்னிலிருந்து, 4.61 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. தென் கொரியாவிற்கான ஏற்றுமதி, 33 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.78 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், இந்தியாவின் புண்ணாக்கு ஏற்றுமதி, 6.41 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (5.30 லட்சம் டன்) விட, 21 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|