பதிவு செய்த நாள்
10 டிச2012
00:27
புதுடில்லி;உலகளவில், 176 நாடுகளை சேர்ந்த பொதுத் துறை நிறுவனங்களில், ஊழல் குறித்த ஆய்வில், இந்தியா, 94வது இடத்தை பிடித்துள்ளது.இதே இடத்தை, ஐரோப்பிய கூட்டமைப்பிலேயே, ஊழல் மிகுந்த நாடாக கருதப்படும் கிரீஸும் பிடித்துள்ளது. மேற்கண்ட இரு நாடுகளும், ஊழலில் நூற்றுக்கு, 61 புள்ளிகளை பெற்றுள்ளன.
பாக்., 73 புள்ளிகளுடன், 139வது இடத்தை பிடித்துள்ளது.கிட்டத்தட்ட, ஊழலே இல்லாத பொதுத்துறை நிறுவனங்களை கொண்ட நாடுகள் என்ற வகையில், டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து ஆகிய மூன்றும் முதலிடத்தை பிடித்துள்ளன. இந்நாடுகள், ஊழலில் நூற்றுக்கு, 10 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன.
இந்த பட்டியலில், சுவீடன் (12), சிங்கப்பூர் (13) ஆகியவை முறையே, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளன. ஊழலில் புரையோடிப்போன பொதுத்துறை நிறுவனங்களை கொண்ட நாடுகளில், சோமாலியா மற்றும் ஆப்கான் நாடுகள் நூற்றுக்கு, 92 புள்ளிகள் பெற்று, 174வது இடத்தை பிடித்து உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|