அரசு நிறுவனங்களில் ஊழல்:இந்தியாவுக்கு 94வது இடம்அரசு நிறுவனங்களில் ஊழல்:இந்தியாவுக்கு 94வது இடம் ... கைவினை பொருட்கள் ஏற்றுமதி 42 சதவீதம் வளர்ச்சி கைவினை பொருட்கள் ஏற்றுமதி 42 சதவீதம் வளர்ச்சி ...
விரைவான வளர்ச்சி பாதையில்இந்திய தொலை தொடர்பு துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:29

புதுடில்லி:இந்தியாவில், அலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை, விரைவாக வளர்ச்சி கண்டு வருவதாக, மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் மிலிந்த் தியோரா, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது:உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய தொலைத்தொடர்பு துறை சிறப்பான அளவில் வளர்ச்சிகண்டு வருகிறது.கடந்த 2005-06ம் நிதியாண்டில், 87,646 கோடி ரூபாயாக இருந்த, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின், மொத்த வருவாய், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 1.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதில், தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு, 1.29 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்களின் வருவாய், 33,629 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.கடந்த 2005ம் ஆண்டு மார்ச் இறுதி முதல், நடப்பு 2012ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்தில், தொலைத்தொடர்பு துறையில், பொதுத் துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 52.9 சதவீதத்தில்இருந்து, 13.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இதே காலத்தில், தனியார் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 47.1 சதவீதத்திலிருந்து, 86.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலத்தில், இந்தியாவில், தொலைத்தொடர்பு சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 95.13 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2005ம் ஆண்டின், இதே மாதத்தில், 9.84 கோடி என்ற அளவில், மிகவும் குறைவாக இருந்தது. இவ்வாறு தியோரா கூறினார்.தொலை தொடர்பு துறையில், பொதுதுறை நிறுவனங்களை விட தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)