பதிவு செய்த நாள்
10 டிச2012
00:31
கோபி:தமிழகத்தில் போதிய அளவிற்கு பருவமழை பெய்யாதது, விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறுவது போன்ற காரணங்களால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்துள்ளது.
பாசன வசதி:தமிழகத்தை பொறுத்தவரை, டெல்டா பாசனத்தில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை என, 11 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இப்பகுதிகளில் 12.50 லட்சம் ஏக்கர் பரப்பு, பாசன வசதி பெறுகிறது.பவானிசாகர் அணை மூலம் தடப்பள்ளி,அரக்கன்கோட்டை பாசன பகுதிகள், எல்.பி.பி., வாய்க்கால், காலிங்கராயன் பாசனங்கள் மூலம், 1.50 லட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறுகிறது.
நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, மானாவாரி பயிர்கள், பயிறு வகைகள் என, ஆண்டுக்கு இருபோகம் சாகுபடி செய்யப்படுகிறது.பாசன பகுதிகளில் மண் அமைப்புக்கு ஏற்றவாறு, தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய என்.பி.கே., உரம், யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், டி.ஏ.பி., மற்றும் சல்பேட், கலப்பு உரங்கள் போன்ற ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தமிழகத்தில், ஆண்டுக்கு, 1.70 லட்சம் டன் ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்டதை விட தேவைக்கு அதிகமாக ரசாயன உரம் பயன்படுத்துவதில், ஈரோடு, சேலம், திருச்சி, கோவை மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.
மண் பரிசோதனை :தேவைக்கு அதிகமாக உரம் பயன்படுத்தப்படுவதை குறைக்கவும், மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ப உரமிடவும், மண் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில், 43 ஆயிரம் மண் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் அதிகரிப்பு, பருவமழை இன்மையால், பாசனப் பரப்பு குறைந்து விட்டது. தமிழகத்தில், 1.23 லட்சம் டன் அளவிற்கே உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் ஆண்டுக்கு, சராசரியாக 1.70 லட்சம் டன் ரசாயன உரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ரசாயன உரங்களை பயன்படுத்துவதில், ஈரோடு, சேலம், திருச்சி, கோவை மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.மண் பரிசோதனை, இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மண் பரிசோதனை, இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிப்பால், தமிழகத்தில் நடப்பாண்டு, 1.23 லட்சம் டன் உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|