கைவினை பொருட்கள் ஏற்றுமதி 42 சதவீதம் வளர்ச்சிகைவினை பொருட்கள் ஏற்றுமதி 42 சதவீதம் வளர்ச்சி ... முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 36 கோடி டன் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 36 கோடி டன் ...
தமிழகத்தில் ரசாயன உரங்கள் பயன்பாடு குறைகிறது:பயிரிடும் பரப்பளவு குறைந்து வருவதால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:31

கோபி:தமிழகத்தில் போதிய அளவிற்கு பருவமழை பெய்யாதது, விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறுவது போன்ற காரணங்களால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைந்துள்ளது.
பாசன வசதி:தமிழகத்தை பொறுத்தவரை, டெல்டா பாசனத்தில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை என, 11 மாவட்டங்கள் பயன் பெறுகின்றன. இப்பகுதிகளில் 12.50 லட்சம் ஏக்கர் பரப்பு, பாசன வசதி பெறுகிறது.பவானிசாகர் அணை மூலம் தடப்பள்ளி,அரக்கன்கோட்டை பாசன பகுதிகள், எல்.பி.பி., வாய்க்கால், காலிங்கராயன் பாசனங்கள் மூலம், 1.50 லட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறுகிறது.
நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, மானாவாரி பயிர்கள், பயிறு வகைகள் என, ஆண்டுக்கு இருபோகம் சாகுபடி செய்யப்படுகிறது.பாசன பகுதிகளில் மண் அமைப்புக்கு ஏற்றவாறு, தழை, மணி, சாம்பல் சத்து அடங்கிய என்.பி.கே., உரம், யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், டி.ஏ.பி., மற்றும் சல்பேட், கலப்பு உரங்கள் போன்ற ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தமிழகத்தில், ஆண்டுக்கு, 1.70 லட்சம் டன் ரசாயன உரம் பயன்படுத்தப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்டதை விட தேவைக்கு அதிகமாக ரசாயன உரம் பயன்படுத்துவதில், ஈரோடு, சேலம், திருச்சி, கோவை மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.
மண் பரிசோதனை :தேவைக்கு அதிகமாக உரம் பயன்படுத்தப்படுவதை குறைக்கவும், மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ப உரமிடவும், மண் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில், 43 ஆயிரம் மண் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் அதிகரிப்பு, பருவமழை இன்மையால், பாசனப் பரப்பு குறைந்து விட்டது. தமிழகத்தில், 1.23 லட்சம் டன் அளவிற்கே உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் ஆண்டுக்கு, சராசரியாக 1.70 லட்சம் டன் ரசாயன உரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ரசாயன உரங்களை பயன்படுத்துவதில், ஈரோடு, சேலம், திருச்சி, கோவை மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.மண் பரிசோதனை, இயற்கை உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மண் பரிசோதனை, இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிப்பால், தமிழகத்தில் நடப்பாண்டு, 1.23 லட்சம் டன் உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)