பதிவு செய்த நாள்
13 டிச2012
00:50
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்றும் மந்தமாகவே இருந்தது. சென்ற அக்டோபர் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி சிறப்பாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது, பங்கு வர்த்தகத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. எனினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.இருப்பினும், பொறியியல், உலோகம், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 31.88 புள்ளிகள் சரிவடைந்து, 19,355.26 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,478.79 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,317.23 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யுனிலிவர், பீ.எச்.இ.எல்., ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அண்டு மகிந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 10.80 புள்ளிகள் குறைந்து, 5,888 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,924.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,874.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|