பதிவு செய்த நாள்
17 டிச2012
00:21
கீழக்கரை:மழை பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் தேங்காய் விளைச்சல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதே சமயம்,தேவை அதிகரிப்பால், கொப்பரை விலை கிலோ, 38லிருந்து, 47 ரூபாயாக உயர்ந்துஉள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, காஞ்சிரங்குடி, பெரியபட்டினம், தாமரைக்குளம், ரெகுநாதபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பிரதான தொழில் தென்னை விவசாயம்.
மழையின்றி விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ கொப்பரையை 38 ரூபாய்க்கு கொள்முதல் செய்த மொத்த வியாபாரிகள், தற்போது தேவை அதிகரிப்பால், 47 ரூபாய்க்கு வாங்க முன் வந்துள்ளனர்.
பெரியபட்டினம் தென்னை விவசாயி மாலிக் கூறியதாவது: விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் தேங்காய் விலையில் ஏற்பட்ட பெரும் சரிவால், ஏராளமானோர் தென்னை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தவில்லை.இந்தாண்டு மழை இல்லாததால், காய்ப்பு குறைந்து விட்டது. உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி இப்படி கூடுதல் செலவினங்களையும் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. விலை உயர்வு சற்று ஆறுதலை அளித்தாலும், விவசாயிகளுக்கு பலனில்லை, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|