எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர் எச்.பி., நிறுவனத்தின் "மெகா' பிரின்டர் ... நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் "பகீர்' தகவல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக குறையும் : மத்திய நிதி அமைச்சகம் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது :உணவு தானிய உற்பத்தியில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2012
23:48

விருதுநகர் :தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், மானாவாரி பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்னையால், டெல்டா பகுதியில் போதுமான பாசன வசதி இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, எண்ணெய் வித்துக்கள், கடலை பருப்பு, மற்றும் துவரை, உளுந்து, பாசி பயறு வகைகளின் உற்பத்தி சரிவடைந்துள்ளது. சந்தையில் வரத்தும் குறைந்து விட்டது.அதே சமயம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.இதனால், தமிழக வியாபாரிகளுக்கு, வட மாநிலங்களில் இருந்து எள்,பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானிலிருந்து ஒரு லாரியில் 10 - 20 டன் வரை உணவு தானியங்களை கொண்டு வரலாம். இதற்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலவாகிறது.தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு, தொடர்ந்து உணவு தானியங்கள் கொண்டு வரப்படுவதால், வட மாநில லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், கொள்முதல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில், உணவு தானியங்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, விருதுநகர் எண்ணெய் வியாபாரி சாவி நாகராஜ் கூறும்போது, ""ராஜஸ்தானில் இருந்து தான், கடலை பருப்பு தமிழகத்திற்கு வருகிறது. ஒரு லோடு கொண்டுவர, ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய், லாரி வாடகை தர வேண்டியுள்ளது. இதனால், கடலை எண்ணெய் விலை தான் கூடும்'' என்றார்.பருப்பு வியாபாரி கார்த்திகேயன் கூறுகையில், ""வடமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மதிப்பில், 15 சதவீதம், லாரி வாடகையாக தர வேண்டிய நிலை உள்ளது. வாடகை செலவை, உணவுப் பொருளின் விலையேற்றம் மூலம், நுகர்வோர் தலையில் சுமத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)