பதிவு செய்த நாள்
22 டிச2012
23:55
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1.39 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1.35 லட்சம் கோடி ரூபாய்) விட, 3.39 சதவீதம் அதிகம் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இறக்குமதி:சர்வதேச அளவில், தங்க ஆபரணங்கள் பயன்பாட்டில், இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது. உள்நாட்டில், தங்கம் உற்பத்தி மிகவும் குறைவு. இதனால், இந்தியாவின் தங்கத்திற்கான தேவை, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.இந்தியா, சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து, தங்கம் மற்றும் வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அவை கலைநயமிக்க ஆபரணங்களாக தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு, அழகிய வடிவங்களில் உருவாக்கப்படும் ஆபரணங்கள், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வைரங்கள்:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 57,427 கோடி ரூபாயாக குறைந்துஉள்ளது. இது, சென்ற நிதி யாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை (75,889 கோடி ரூபாய் ) விட, 24.12 சதவீதம் குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 92.64 சதவீதம் வளர்ச்சிகண்டு, 28,143 கோடியிலிருந்து, 53,170 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி,15.11 சதவீதம் சரிவடைந்து,22,285 கோடி ரூபாயிலிருந்து, 18,917 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நவரத்தினங்கள் ஏற்றுமதி, 16.48 சதவீதம் வளர்ச்சி கண்டு,916 கோடி யில் இருந்து, 1,053 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 30.56 சதவீதம் அதிகரித்து, 2,122 கோடியிலிருந்து, 2,754 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
நவரத்தினங்கள்:கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 2.84 சதவீதம் குறைந்து, 5,364 கோடி யிலிருந்து, 5,212 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. முத்து ஏற்றுமதி, 9 கோடியிலிருந்து, 20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. செயற்கை கற்கள் ஏற்றுமதி, 76 கோடியிலிருந்து, 108 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு, அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முக்கிய சந்தைகளாகத் திகழ்கின்றன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்நாடுகளுக்கான ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது.
நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 15,263 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில், மேற் கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (14,706 கோடி ரூபாய்) விட, 3.79 சதவீதம் உயர்வாகும். கணக்கீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 29.13 சதவீதம் வளர்ச்சிகண்டு, 6,000 கோடி ரூபாயிலிருந்து, 7,748 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 3.19 சதவீதம் குறைந்து, 4,234 கோடி ரூபாயிலிருந்து, 4,099 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வெள்ளி:வெள்ளி ஏற்றுமதி, 35.17 சதவீதம் வளர்ச்சிகண்டு, 332 கோடி ரூபாயிலிருந்து, 449 கோடி ரூபாயாகவும், முத்துக்கள் ஏற்றுமதி, 54 லட்சத்திலிருந்து, 89 லட்சம் ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது. அதேசமயம், கச்சா வைரம் ஏற்றுமதி, 2.84 சதவீதம் குறைந்து, 743 கோடி ரூபாயிலிருந்து, 605 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என, இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|