பதிவு செய்த நாள்
26 டிச2012
00:34
மும்பை:சர்க்கரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கி விட்டு, வரி விதிப்பு அடிப்படையில், இத்துறையின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியாவில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்க்கரை உபரியாக உற்பத்தியாகி உள்ளது. இதனால், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த
சர்க்கரை பருவத்தில், பொது உரிம அடிப்படையில் தாராளமாக சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் வரை 34 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், அக்டோபரில் துவங்கிய நடப்பு சர்க்கரை பருவத்தில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.நாட்டில் பயிரிடப்பட்ட கரும்பின் பரப்பளவு, சர்க்கரை உற்பத்தி குறித்த மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது குறித்து, வரும் 2013ம் ஆண்டு ஜனவரியில், மத்திய அரசு முடிவு செய்யும் என, தெரிகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை, டன்னுக்கு, 140 டாலர் குறைந்து, 650 லிருந்து, 510 டாலராக சரிவடைந்துள்ளது. உள்நாட்டை விட, சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை குறைவாக உள்ளதால், 10 சதவீத சுங்க வரி செலுத்தி, சர்க்கரை இறக்குமதி செய்து கொள்வது அதிகரித்துள்ளது.இதனால், உள்நாட்டு சர்க்கரைத் துறை பாதிக்கப் பட்டுள்ளதால், சர்க்கரை இறக்குமதி வரியை, 60 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (இஸ்மா) கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|