ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர் - இந்தியா புதிய சாதனைஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர் - இந்தியா புதிய சாதனை ... விஸ்வரூபம் எடுக்கும் இந்திய விருந்தோம்பல் துறை விஸ்வரூபம் எடுக்கும் இந்திய விருந்தோம்பல் துறை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2012
00:34

மும்பை:சர்க்கரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கி விட்டு, வரி விதிப்பு அடிப்படையில், இத்துறையின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியாவில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்க்கரை உபரியாக உற்பத்தியாகி உள்ளது. இதனால், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த
சர்க்கரை பருவத்தில், பொது உரிம அடிப்படையில் தாராளமாக சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பர் வரை 34 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், அக்டோபரில் துவங்கிய நடப்பு சர்க்கரை பருவத்தில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.நாட்டில் பயிரிடப்பட்ட கரும்பின் பரப்பளவு, சர்க்கரை உற்பத்தி குறித்த மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பது குறித்து, வரும் 2013ம் ஆண்டு ஜனவரியில், மத்திய அரசு முடிவு செய்யும் என, தெரிகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை, டன்னுக்கு, 140 டாலர் குறைந்து, 650 லிருந்து, 510 டாலராக சரிவடைந்துள்ளது. உள்நாட்டை விட, சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை குறைவாக உள்ளதால், 10 சதவீத சுங்க வரி செலுத்தி, சர்க்கரை இறக்குமதி செய்து கொள்வது அதிகரித்துள்ளது.இதனால், உள்நாட்டு சர்க்கரைத் துறை பாதிக்கப் பட்டுள்ளதால், சர்க்கரை இறக்குமதி வரியை, 60 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, சர்க்கரை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (இஸ்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)