பதிவு செய்த நாள்
28 டிச2012
23:47
புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், உள்நாட்டில், உருக்கிற்கான தேவை, 7.50 கோடி டன்னாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டின் தேவையை விட, 5.5 சதவீதம் அதிகம் என, டாட்டா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து, வரும் 2013-14ம் நிதியாண்டில், உருக்கிற்கான தேவை, 7 சதவீதம் அதிகரிக்கும். கடந்த 2011-12ம் நிதியாண்டில், உருக்கு பயன்பாடு, 7.10 கோடி டன்னாக இருந்தது என, டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.எம்.நெருர்கர் தெரிவித்தார்.வரும் ஜனவரி மாதத்தில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தயாரிப்பு மற்றும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு துறைகளில், உருக்கிற்கான தேவை அதிகரிக்கும் என, நெருர்கர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|