பதிவு செய்த நாள்
28 டிச2012
23:49
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பு, 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, 5.79 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.பயன்பாடு இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 5.75 லட்சம் டன்னாக இருந்தது என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், இதே காலத்தில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 6.34 லட்சம் டன்னிலிருந்து, 6.64 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ரப்பர் இறக்குமதி, 1.16 லட்சம் டன்னிலிருந்து, 1.54 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.இருப்பினும், ரப்பர் ஏற்றுமதி, 21,686 டன்னிலிருந்து, 9,179 டன்னாக சரிவடைந்துள்ளது.உள்நாட்டில், ரப்பருக்கான தேவை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நிதியாண்டில், உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி, 1.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும். இதை ஈடுசெய்ய, குறைந்தபட்சம், ஒரு லட்சம் டன் ரப்பர் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.எனவே, மத்திய அரசு, மூலப் பொருட்கள் மற்றும் இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என, அகில இந்திய ரப்பர் தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இறக்குமதி வரிதற்போது, சர்வதேச சந்தையில், ஒரு கிலோ இயற்கை ரப்பரின் விலை, 160 ரூபாயாக உள்ளது. இறக்குமதி வரி, கிலோவுக்கு, 20 ரூபாய் என்ற அளவில் உள்ளது.இது, 12.5 சதவீத வரிவிதிப்பாகும். அதேசமயம், முடிக்கப்பட்ட ரப்பர் பொருட்கள் மீதான இறக்குமதி வரி, 10 சதவீத அளவிற்கே உள்ளது. எனவே, இறக்குமதி வரியை, 7,5 சதவீதம் அல்லது கிலோவுக்கு, 10 ரூபாய் என்ற அளவில் குறைக்க வேண்டும் என, இக்கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|