பதிவு செய்த நாள்
02 ஜன2013
00:21
தேனி:ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், தமிழக அரசு காய்கறிகள், பழச்செடிகள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 75 ஆயிரம் ஹெக்டேரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, 50 சதவீத மானிய விலையில், காய்கறி விதைகளை வழங்க, 19.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டு மற்றும் உயர் விளைச்சல் ரக காய்கறி விதைகள், பழச்செடிகள் ஆகியவை, மானிய விலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக அரை ஹெக்டேருக்கு தேவையான காய்கறி விதைகள், மற்றும் ஒரு ஹெக்டருக்கு தேவையான பழச்செடிகள் வழங்கப்படும் என, தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவசாயிகள், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில், அனைத்து காய்கறி விதைகள், பழக்கன்றுகள் ஆகியவற்றை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகம் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|