பதிவு செய்த நாள்
04 ஜன2013
00:51
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததை அடுத்து, "சென்செக்ஸ்' 0.26 சதவீதஅதிகரிப்புடனும், "நிப்டி', 6,000 புள்ளிகளை கடந்தும் முடிவடைந் தன.இந்நிலையில், நடப்பாண்டின் இறுதிக்குள், "சென்செக்ஸ்', முன் எப்போதும் இல்லாத அளவாக, 21,700 புள்ளிகளை எட்டும் என்ற, எச்.எஸ்.பீ.சி.,யின் மதிப்பீடு வெளியானது.கடந்த, 2008ம் ஆண்டு, ஜன., 10ம் தேதி அன்றுதான், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், சாதனை அளவாக, 21,206.77 புள்ளிகளை எட்டியிருந்தது.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே காணப்பட்டது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதே சமயம், நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 50.54 புள்ளிகள் அதிகரித்து, 19,764.78 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,786.30 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 19,693.29 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாக்டர் ரெட்டீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா பவர், சன்பார்மா, மாருதி உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்தும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 16.25 புள்ளிகள் உயர்ந்து, 6,009.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,017 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,986.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|