பதிவு செய்த நாள்
05 ஜன2013
00:46
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக் கிழமையன்றும் ஓரளவிற்கு நன்கு இருந்தது. முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதைஅடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.நேற்றைய வர்த்தகத்தில், பொதுத் துறை, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது. அதேசமயம், உலோகம், மோட்டார் வாகனம், நுகர்பொருட்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 19.30 புள்ளிகள் அதிகரித்து, 19,784.08 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,797.44 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,679.99 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், ஓ.என்.ஜி.சி., விப்ரோ உள்ளிட்ட 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா ஸ்டீல், ஸ்டெர்லைட் உள்ளிட்ட 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 6.65 புள்ளிகள் உயர்ந்து, 6,016.15 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,020.75 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,981.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|