பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:13
புதுடில்லி:நடப்பு ஜனவரி 1 முதல், புதுடில்லி விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, டில்லியில், விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகளுக்கு, அவர்களிடம் வசூலித்த கூடுதல் தொகையை திரும்ப தர வேண்டும் என, விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.சி.ஏ.,) உத்தரவிட்டுள்ளது.
முன், டில்லி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வேரிடம், விமான மேம்பாட்டு கட்டணமாக 1,200 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது, தற்போது 600 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.டில்லி விமான நிலையத்தில் இருந்து, நாள்தோறும் 14 லட்சம் பேர் பல்வேறு விமானங்களில் பயணிக்கின்றனர்.
இந்த வகையில், சர்வதேச விமான சேவை மேற்கொள்ளும் நிறுவனங்கள், நாளொன்றுக்கு, 90 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.அது போன்று, உள்நாட்டு விமான சேவை மேற்கொள்வோருக்கு நாளொன்றுக்கு, 30 லட்சம் ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்.
விமான சேவை டிக்கெட்டை, சுற்றுலா பயண முகவர்கள் வழங்கியிருந்தால்,அவர்கள், பயணிகளிடம் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என, டீ.ஜி.சி.ஏ., உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|