பதிவு செய்த நாள்
07 ஜன2013
23:45
- நமது நிருபர் -பழங்கள், காய்கறிகள் வீணாவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், 79 குளிர்பதன கிடங்குகளை, மத்திய அரசு அமைக்க திட்டமிட்டு உள்ளதாக, உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை செயலர் ராஜேஷ் கக்கர் தெரிவித்தார்.நாட்டில் விளையும் காய்கறிகள் மற்றும் பழவகைகளை பாதுகாக்க, போதுமான குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லை. இதனால், ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.இதுவரை, எட்டு குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பல இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, மத்திய அரசு, நாடு முழுவதிலும், 30 உணவுப் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா, ஒரு பூங்கா அமைய உள்ளது என, ராஜேஷ் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|