பதிவு செய்த நாள்
09 ஜன2013
01:09
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க் கிழமையன்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு, மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியபங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.
நேற்றைய பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள், மின்சாரம், ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், உலோகம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 51.10 புள்ளிகள் அதிகரித்து, 19,742.52 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 19,761.78 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,632.59 புள்ளி கள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.டி.சி., சிப்லா உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 13.30 புள்ளிகள் உயர்ந்து, 6,001.70 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,007.05 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,964.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|