பதிவு செய்த நாள்
09 ஜன2013
01:10
புதுடில்லி:டீசல் விலையை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு, உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
நிதி பற்றாக்குறை:நாட்டின் மானியச்சுமை அதிகரிப்பால், நிதிப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, டீசல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும். இல்லாவிடில்,நிதிப் பற்றாக்குறை உயர்ந்து விடும்.தற்போது,சர்வதேச சந்தையில்,ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த ஓராண்டிற்குள், ஒரு லிட்டர் டீசல் விலையில், 10 ரூபாய் உயர்த்த வேண்டியிருக்கும் என, ரங்கராஜன் தெரிவித்தார்.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அடக்க விலைக்கும் குறை வாக, விற்பனை செய்து வருகின்றன. இதனால், நடப்பு நிதியாண்டின் இறுதியில், இந்நிறுவனங் களுக்கு, 1.63 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வருவாய் இழப்பு ஏற்படும்.தற்போதைய நிலையில், எண்ணெய் சந்தைப் படுத்தும் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 9.28 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. டில்லியில், ஒரு லிட்டர் டீசலின் விலை, 47.15 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
வருவாய் இழப்பு:எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் மொத்த வருவாய் இழப்பில், ஓ.என். ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் கெயில் ஆகிய நிறுவனங்கள், 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, மானியம் வழங்குகின்றன. மீதமுள்ள தொகையை, நிதி அமைச்சகம் வழங்க வேண்டும் என, பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|