பொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறதுபொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது ... பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
டீசல் விலையை உயர்த்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்: ரங்கராஜன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
01:10

புதுடில்லி:டீசல் விலையை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு, உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
நிதி பற்றாக்குறை:நாட்டின் மானியச்சுமை அதிகரிப்பால், நிதிப் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, டீசல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும். இல்லாவிடில்,நிதிப் பற்றாக்குறை உயர்ந்து விடும்.தற்போது,சர்வதேச சந்தையில்,ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த ஓராண்டிற்குள், ஒரு லிட்டர் டீசல் விலையில், 10 ரூபாய் உயர்த்த வேண்டியிருக்கும் என, ரங்கராஜன் தெரிவித்தார்.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை அடக்க விலைக்கும் குறை வாக, விற்பனை செய்து வருகின்றன. இதனால், நடப்பு நிதியாண்டின் இறுதியில், இந்நிறுவனங் களுக்கு, 1.63 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வருவாய் இழப்பு ஏற்படும்.தற்போதைய நிலையில், எண்ணெய் சந்தைப் படுத்தும் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 9.28 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. டில்லியில், ஒரு லிட்டர் டீசலின் விலை, 47.15 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
வருவாய் இழப்பு:எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் மொத்த வருவாய் இழப்பில், ஓ.என். ஜி.சி., ஆயில் இந்தியா மற்றும் கெயில் ஆகிய நிறுவனங்கள், 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, மானியம் வழங்குகின்றன. மீதமுள்ள தொகையை, நிதி அமைச்சகம் வழங்க வேண்டும் என, பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)