பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:22
மதுரை:தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு பொய்த்தது. திடீரென பெய்யும் கோடை மழையும் ஏமாற்றியதால் நீர்நிலைகள் வறண்டன. இதனால், கரும்பு விவசாயத்திற்கு வழியின்றி போனது. வெல்லம் விலை மலைக்க வைக்கிறது. இதனால், அரசு வழங்கிய பொங்கல் பொருட்களில் வெல்லம் காணாமல் போனது. அதற்கு பதில் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியில், 50 ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ, பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், முந்திரி பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன.இந்தாண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம் மற்றும், 100 ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். வெல்லம் விலை உயர்வால், அதன் இடத்தை சர்க்கரை பிடித்து கொண்டது. அரசு, பொங்கல் பொருட்களில் முதல்முறையாக சர்க்கரை வழங்குகிறது.
ஞானசுந்தரி, அலங்காநல்லூர்: சர்க்கரையில் பொங்கல் வைத்தால் நன்றாக இருக்கும். ஒரு கிலோ பச்சரிசிக்கு, ஒரு கிலோ சர்க்கரை போதாது. ஆனால், ஒரு கிலோ வெல்லம் போதுமானது.முருகேசன், அலங்காநல்லூர்: தி.மு.க., ஆட்சியில் வெல்லம் கொடுத்தனர். அ.தி.மு.க., ஆட்சியில் கரும்பு உற்பத்தி, போதிய அளவிற்கு இல்லாததால் சர்க்கரை கொடுக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|