பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:44
புதுடில்லி:கொண்டைக் கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு உயர்த்தியதால், அதன் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது.பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் அவற்றின் சாகுபடியை அதிகரிக்கவும், பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
ஆர்வம்:இதன்படி, கொண்டைக் கடலைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை, ஒரு குவிண்டாலுக்கு, 14 சதவீதம் உயர்த்தப்பட்டு, 3,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் பருப்பு வகைகளை அதிக பரப்பில் பயிரிட்டு வருகின்றனர்.குறிப்பாக, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், ரபி பருவத்தில், கொண்டைக் கடலையை அதிக பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இதையடுத்து, ரபி பருவத்தில், கொண்டைக் கடலை பயிரிடும் பரப்பளவு 4.7 சதவீதம் அதிகரித்து, 91.68 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இது, கடந்த ரபி பருவத்தில், 86.99 லட்சம் ஹெக்டேராக இருந்தது.கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும், கொண்டைக் கடலை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் இதன், சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது.பருப்பு வகைகள்:இந்தியாவில், ரபி பருவம், விளைபொருள் மற்றும் மாநிலங்களின் அடிப்படையில் மாறுபடும். எனினும், பொதுவாக, ரபி பருவம் என்பது, மே மாதம் துவங்கி ஜனவரியில் முடிவடையும்.
பெரும்பாலான மாநிலங்களில் ரபி பருவம் என்பது, ஜூன் மாதம் துவங்கி அக்டோபரில் முடிவடையும்.இப்பருவத்தில், கோதுமை, முளைப்பயறு, பருப்பு வகைகள், உள்ளிட்டவை விளைகின்றன.தமிழகம் மற்றும் ஆந்திராவில், உளுத்தம் பருப்பு வகைகளை பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.அதே சமயம், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, 2.54 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, 84.16 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
கடுகு, நிலக்கடலை ஆகிய வித்துக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த எண்ணெய் வித்துக்கள் பரப்பளவு அதிகரித்துள்ளது.ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்களில், கடுகு அதிக பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. இதனால், ஒட்டு மொத்த அளவில், கடுகு பயிரிடும் பரப்பளவு, 67 லட்ம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.அதே சமயம், கோதுமை பயிரிடும் பரப்பளவு, 293 லட்சம் ஹெக்டேரில் இருந்து 291 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், கோதுமை பயிரிடும் பரப்பளவு 50 லட்சம் ஹெக்டேராகவும், உத்தர பிரதேசத்தில் ஒரு கோடி ஹெக்டேராகவும் உள்ளன. இவை, பஞ்சாப் மற்றும் அரியானாவில், முறையே 35 லட்சம் எக்டேர் மற்றும் 25 லட்சம் ஹெக்டேராக உள்ளன.மக்காச்சோளம்:ஒடிசாவில், பயத்தம் பருப்பு அதிக பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதால், அதன் ஒட்டுமொத்த பரப்பளவு 4.57 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
கருஞ்சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றின் பயிரிடும் பரப்பளவு, முறையே, 38.56 லட்சம் ஹெக்டேர் மற்றும் 13.03 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் உயர்ந்துள்ளன.ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், தானிய வகைகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது. அதே சமயம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|